×

மோகனூரில் சமுதாய வளைகாப்பு விழா

மோகனூர், ஆக.6: மோகனூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, மோகனூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் சுகாதார துணை இயக்குநர் பூங்கொடி முன்னிலை வகித்தார். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு, 100 கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, புடவை, வளையல் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மோகனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கலைச்செல்வி, மோகனுர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி கருமணன், டாக்டர்கள் குழந்தைவேல், மல்லிகா, செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மோகனூர் ஆரம்ப சுகாதார நிலையம், நாமக்கல் இந்திய மருத்துவ சங்கம், ஐஎம்ஏ பெண் மருத்துவர்கள் பிரிவு, நாமக்கல் இன்னர்வீல் கிளப், நாமக்கல் தங்கம் மருத்துவமனை மற்றும் புற்றுநோய் சிகிச்சை மையம் ஆகியோர் செய்திருந்தனர்.

The post மோகனூரில் சமுதாய வளைகாப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Mohanur Primary Health Centre ,World Breastfeeding Week ,Moganur ,Dinakaran ,
× RELATED தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு